சங்கரன்கோவில் இடைத்தேர்தலில்
தே.மு.தி.க.வுக்கு ஆதரவு தெரிவிக்க
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு.
தே.மு.தி.க.வுக்கு ஆதரவு தெரிவிக்க
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு.
- செய்தி
கம்பெனிக்கு ஆள் கிடைச்சிடுச்சு... சியர்ஸ்!
ஜெயலலிதா ஜெயிலில் இருந்தபோது கொசுக்கடியில் தவித்த மாதிரி, இன்றைக்கு மொத்த தமிழகமும் பவர் கட்டால் கொசுக்கடியில் தவிக்கிறது.
- ஜான் பாண்டியன்
"தான் அனுபவிச்ச சிரமத்தை தமிழகமே அனுபவிக்கனும்னு நினைக்கிறாரோ என்னவோ..."
மக்கள் பிரச்னையை பேசும் சபையில் நின்றுகொண்டு தனியாக நிற்க தைரியம் இருக்கா என கேட்கிறார் ஜெயலலிதா.
- கேப்டன் விஜயகாந்த்
"தனியாவா... தண்ணியாவா?"

வங்கிகளில் அடுத்தடுத்து நடக்கும் கொள்ளைகளால் மக்களுக்கு வங்கியில் பணம் போடவே பயம் வந்து விட்டது!
- ஜெ.அன்பழகன்
தி.மு.க. எம்.எல்.ஏ
தி.மு.க. எம்.எல்.ஏ
"தனியா பேங்க் ஆரம்பிக்கும் திட்டம் ஏதாச்சும் இருக்கா அன்பு சார்?"
ஒ.பன்னீர்செல்வமும் செங்கோட்டையனும் கேப்டன்கிட்ட வந்து என்ன கேட்டாங்கன்னு தெரியுமா?
- பிரேமலதா
"சைடிஷ்ஷா சால்னாவா?"
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.
- மு.க. ஸ்டாலின்
"பொதுக்குழுவில் மாற்றம் நடக்கும் என எதிர்பார்த்து நீங்க ஏமாந்து போனதை ஊரே பேசுதே தளபதியாரே..."





+ comments + 3 comments
Super news and even more super comments.
ஹா ஹா ஹா கலக்குறாரே குரங்கார்....... வெல்டன்!
பசுபதி
விஜயகாந்தை மட்டும் அநியாயத்துக்கு வறுக்குறீங்களே... எல்லாருமே தான் தண்ணி அடிக்கிறாங்க. கலைஞர் அடிக்கலையா? ஜெயலலிதா அடிக்கலையா? கேப்டன் அடிச்சா மட்டும் இப்படி கிண்டலடிக்கிறீங்களே...
நியாயமா கும்பல்?
Post a Comment