Latest Movie :

சசிகலா தம்பி கைதாகிறார்?



மன்னாதி மன்னன் மன்னார்குடி திவாகரன் மீது முதன் முறையாக வழக்குப் பதிவாகி இருக்கிறது. சசிகலாவின் உடன்பிறந்த தம்பியான திவாகரன் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது எல்லாம் நிழல் சக்தியாக கட்சியை வழி நடத்துபவர். சசிகலா - ஜெயலலிதா மோதல் துவங்கிய நாளில் இருந்து உளவுத்துறை வகையாக கண் பதித்து இருப்பது திவாகரன் மீதுதான்.

யாரிடமும் பேச மாட்டார்... குறிப்பாக மீடியாக்களை தவறியும் சட்டை செய்ய மாட்டார்... சசிகலாவைத் தவிர வேறு யாரிடமும் போனில் பேச மாட்டார். அதிகாரிகள் வட்டாரத்தில் ஆக வேண்டியதை தன் தரப்பு ஆட்கள் மூலமாக நோட் போட்டு அனுப்புவார். இதுதான் திவாகரன் பாணி...


கடந்த சட்டமன்றத் தேர்தலில் திவாகரன் தயவு மூலமாக சீட் பெற்றவர்கள் 45 பேர்களாம். அதில், அமைச்சர்கள் 7 பேர். அதனால் தான் அவர் மூலமாக கட்சிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரும் என ஜெயலலலிதா நினைக்கிறார். எம்.நடராஜனைக் காட்டிலும் ஆபத்தான சக்தியாக ஜெயலலிதா கருதுவது திவாகரனைத்தான்.

எந்த வழக்கில் திவாகரனை வளைக்கலாம் என நினைத்த போலீஸ் தரப்பு, உள்ளூர் விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது. திவாகரனின் பண்ணை இருக்கும் ரிசியூர் கிராமத்தை சேர்ந்த தமிழார்வன் மனைவி கஸ்தூரி என்பவர் மூலமாக திவாகரனுக்கு எதிராக புகார் வாங்கப்பட்டு உள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது ஏற்பட்ட பிரச்சனையை மையமாக கொண்ட வழக்கு இப்போது விஸ்வருபம் எடுத்திருக்கிறது.


மேலிட உத்தரவின் பேரில் திவாகரன் வீடு, செங்கலமலத் தாயார் கல்வி அறக்கட்டளை ஆகிய இடங்களில் போலீஸ் ரெய்டு நடத்தப்பட்டு இருக்கிறது. அடுத்தகட்டமாக திவாகரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என பரபரக்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

சசி - ஜெயா மாலை மாற்றும் நிகழ்வில் பின்னணியில் திவாகரன்

கைது நடவடிக்கை வரை வந்தால் திவாகரனின் பதிலடி வேறு மாதிரி இருக்கும் என்கிறார்கள் மன்னார்குடி வட்டாரத்தினர். 'திவாகரனை நம்பி கட்சியை விட்டு வெளியே வர இப்போதும் பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களை வைத்து திவாகரன் ஆட்டம் காட்டத் தொடங்கினால் , அப்புறம்தான் அம்மையாருக்குத் தெரியும்' என்கிறார்கள் பலரும்.

போலீஸ் அதிகாரிகள் சிலர், 'இதையேதான் நாங்களும் சொல்கிறோம்... திவாகரன் அப்படி எல்லாம் ஏதும் செய்யக் கூடாது என்பதற்காக தான் இந்த அதிரடி' என்கிறார்கள்.

- கும்பல்
Share this article :

+ comments + 2 comments

ரா... ரா... திவாகரா...

வா... வா... சீக்கிரம் வா...

என்ன ஆட்டம்டா போட்டீங்க?

எந்த ஊரு ஜெயிலோ?

எந்த ஊரு களியோ?

29 January 2012 at 12:38

paropm...enna panrangannu

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger