Latest Movie :

கட்சியிலிருந்து தியாகு நீக்கம்!



தாமரை - தியாகு மனமோதல் இன்னமும் தீர்வுக்கு வரவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடந்த தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப் பொதுப்பேரவை தியாகுவுக்கு எதிராக தீர்மானங்களை இயற்றியிருக்கிறது. 

                                        


அந்தத் தீர்மானங்கள்...


1. 
இடைக்கால அமைப்புக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தைப் பொதுப்பேரவை முழுமையாக விவாதித்தது.  பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து தோழர் தியாகுவை நீக்கியதை பொதுப்பேரவை ஒரு மனதாக ஏற்றுக் கொள்கிறது. மேலும் அவரை அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்து தற்காலிகமாக நீக்குவது என்றும், அவருடைய எதிர்கால நடவடிக்கைகளைக் கணக்கில் கொண்டு மீண்டும் அமைப்பில் இணைத்துக் கொள்வதா இல்லையா என்பதை அடுத்துக் கூடும் பொதுப்பேரவை முடிவு செய்யும் என்றும் தீர்மானிக்கிறது.

2.    இப்பொதுப்பேரவையில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு மடல் அனுப்புவது என்றும், அவர்கள் அளிக்கும் விளக்கத்தை ஒட்டி அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இவ்விளக்க மடலை 15 நாள்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பேரவை தீர்மானிக்கிறது.

3.    தமிழ்த் தேசிய விடுதலை இயக்க உறுப்பினர் சுதா காந்தியை நாடு கடந்த தமிழ்ஈழ அரசாங்கத்தின் நியமன உறுப்பினர் பொறுப்பிற்கு இயக்கத்தின் இசைவு பெறாமல் தன்னிச்சையாக அறிவித்ததை பொதுப்பேரவை ஏற்க மறுக்கிறது.


4.   தமிழ்த் தேசியப் பகை சக்தியான இந்தியத் தேசியக் கொடியைத் தியாகு தம் நெஞ்சில் அணிந்து கொண்டு தொலைக்காட்சியில் பங்கேற்றதை இப்பொதுப்பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
5.    தமிழ்ஈழ விடுதலைக்கான ஆதரவையும் தமிழ்த்தேசிய விடுதலைக்கான போராட்டத்தையும் முழு வீச்சுடன் தொடர்ந்து முன்னெடுப்பது என்றும் பேரவை உறுதி கொள்கிறது.

6.    இப்பொதுப்பேரவை தோழர் மு.மோகன்ராசு அவர்களைப் பொதுச் செயலாளராகவும் தோழர்கள் சிவ.காளிதாசன் (சென்னை),  கதிர்நிலவன் (மதுரை),  நா.ஆறுமுகம்  (நாமக்கல்),  தேவேந்திரன் (கோவை) ஆகியோரைத் தலைமைக்குழு உறுப்பினர்களாகவும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கிறது. அடுத்த பொதுப்பேரவை கூடும் வரை இவர்கள் பொறுப்பில் இருப்பார்கள்.

7.    தமிழ்த்தேசிய விடுதலை இயக்க மாத இதழான “சமூகநீதித் தமிழ்த் தேசம்”  ஆசிரியர் குழுவிற்குத் தோழர்கள் கலைவேலு, கதிர்நிலவன் ஆகியோரைப் பொதுப்பேரவை தேர்ந்தெடுக்கிறது. இதழின் பதிப்பாசிரியராகத் தோழர் சிவ.காளிதாசன் அவர்களே தொடர்ந்து நீடிப்பார் என்றும் பொதுப்பேரவை தீர்மானிக்கிறது.

8.    புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் தோழர் மு.மோகன்ராசு,   தலைமைக்குழு    உறுப்பினர்கள்     தோழர்கள்  சிவ.காளிதாசன், நா.ஆறுமுகம், கதிர்நிலவன், தேவேந்திரன் ஆகியோருக்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தை வழி நடத்திச் செல்லவும் உரிய நேரத்தில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவும் இயக்கத்தின் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முன்னெடுத்துச் செல்லவும் பொதுப்பேரவை முழு அதிகாரம் வழங்குகிறது.

தியாகு தரப்பு விளக்கம்:

''கட்சியின் பொதுச் செயலாளரை இப்டி தன்னிச்சையாக யாரும் நீக்க முடியாது. இந்திய தேசியக் கொடியை சட்டையில் குத்திக் கொண்டது  தவறு என தியாகு தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார். தவிர்க்க முடியாத அந்த சூழலின் பின்னணியையும் அதில் விளக்கி இருக்கிறார். அதனால், அந்த விவகாரத்தை பூதாகரப்படுத்துவது தவறு. தியாகு மீது நடவடிக்கை எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. தியாகுவின் மகள் நாடு கடந்த தமிழீழ அரசின் பொறுப்புக்கு முன்னிறுத்தப்பட்டது பதவி நோக்கத்தில் அல்ல. அது போராட்டகரத்துக்கான அர்ப்பணிப்பு. இவையெல்லாம் தெரிந்தும் தியாகு மீது தொடர் வன்மம் காட்டுபவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்!" என்கிறது தியாகு தரப்பு. 

இரு தரப்பு இடைவிடாத மோதலையும் பார்த்தால், பிரச்சனை இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது!

- சே.சத்தியசீலன் 



Share this article :

+ comments + 3 comments

Anonymous
31 May 2012 at 10:11

சார், முதலில் இந்த தியாகு, தாமரை மேட்டருக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இந்த விவகாரத்தை இதற்கு மேலும் படிக்க மனம் இல்லை. அவர்கள் நிம்மதியாக இருக்கட்டும்... விட்டுவிடுங்கள் ப்ளீஸ்

திடீரென தாமரைக்கு ஆதரவாகவும் தியாகுக்கு எதிராகவும் செய்தி வெளியிடுவது ஏன்?

Anonymous
8 August 2012 at 10:21

Thiyagu is not a right person.

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger