Latest Movie :

ராமஜெயம் கொலையில் எஸ்ஸார் கோபி?

''மதுரையில் அழகிரியின் நெருக்கப்புள்ளியாக இருக்கும் எஸ்ஸார் கோபிக்கும் ராமஜெயத்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மன வருத்தம். 200 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட அந்த விவகாரம் அழகிரி உள்ளிட்ட பெருந்தலைகளின் பார்வைக்கு போன பிறகும் தீர்ந்தபாடில்லை. அதனால்கூட இந்தக் கொலை நடந்திருக்கலாம்!" - இதுதான் போலீஸ் கவனத்துக்கு வந்திருக்கும் முதல்கட்ட தகவல்.


இதனை கடுமையாக மறுத்து சில போலீஸ் அதிகாரிகளிடம் பேசியிருக்கிறார் எஸ்ஸார் கோபி. ''அழகிரி அண்ணனுக்கு எதிராக கடிதம் எழுதியதாக கிளப்பிவிட்ட பிரச்சனையே இப்போது தான் ஓய்ந்திருக்கிறது. அப்படியிருக்கையில் என்னை திட்டமிட்டு ராமஜெயம் வழக்கில் சேர்க்கிறார்கள். எனக்கும் அவருக்கும் பணம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் இருந்தது உண்மைதான். ஆனால், அது மிக சாதாரணமான பிரச்சனை. தயவு செய்து என்னை இந்த வழக்கில் சேர்க்காமல் காப்பாற்றுங்கள்" எனப் புலம்பியிருக்கிறார் கோபி.


தனிப்பட்ட பழிவாங்களுக்காக நடந்திருக்கும் கொலை தான் இது என உறுதி செய்த போலீஸ் நாம் ஏற்கனவே சொன்னபடி உண்மை குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டது. ஆனாலும், சொல்ல முடியாத காரணங்களை வெளியிடத் தயங்கியும், நேரு மீதான நல்லெண்ணம் குறையக்கூடாது என எண்ணியும் சற்றே அமைதி காக்கிறது காக்கி.இதற்கிடையில், எஸ்ஸார் கோபி விவகாரத்தை போலீஸ் இழுப்பது திட்டமிட்ட ஓன்று தான் என நினைக்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்.

நாளையே விசாரணை என்கிற பெயரில் எஸ்ஸார் கோபி போலீஸ் வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டால் அது, அழகிரிக்கும் நேருவுக்குமான மோதலின் தொடக்கமாக அமையும் என்பது நிச்சயம்!
இதற்கிடையில் ராமஜெயத்துக்கும் மத்திய அமைச்சரும் அவருடைய நெருங்கிய உறவுக்காரருமான நெப்போலியன் விவகாரத்தையும் போலீஸ் உற்றுக் கவனிக்கிறது. ராமஜெயத்துடன் மோதல் ஏற்பட்ட பிறகு தான் நெப்போலியன் அழகிரி பக்கம் சாய்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது!

- கும்பல்  
Share this article :

+ comments + 4 comments

கமால் பாட்ஷா
5 April 2012 at 10:37

மிக அற்புதமான பதிவு,,, கலக்குகிறது கும்பல். தமிழ் மீடியாக்களை மிரட்டுகிர அளவுக்கு பிரித்து மேய்கிறீர்கள்.

காவேரி விநாயகம்
5 April 2012 at 17:35

ராமஜெயம் கொலை வழக்கில் இப்படியொரு திருப்பம் நிகழ்ந்திருப்பதை எந்த மீடியாக்களும் சொல்லாத நிலையில், கும்பல் பட்டையைக் கிளப்புகிறது. போலீஸ் சோர்ஸ் மூலமாகத்தான் கும்பல் இவ்வளவு விரிவாக எழுதுகிறதா? இல்லை நடுநிலையான ஆட்களின் தகவல்களா? கும்பல் இணையதளத்துக்கு நாங்கள் சொல்லும் பணிவான அட்வைஸ்... புலனாய்வில் கலக்கும் தாங்கள் தயவுசெய்து போலீஸ் தரும் செய்திகளை அப்படியே நம்பி விடாதீர்கள். இன்றைய தமிழ்ப் பத்திரிக்கைகள் செய்யும் தவறை நீங்களும் செய்யாதீர்கள். போலீ(ஸ்) என்கவுன்டரை பற்றி நீங்கள் படுதுல்லியமாகவும் உன்மையான நிகழ்வையும் எழுதிய பிறகே உங்கள் மீது எனக்கு நம்பிக்கை வந்தது. அதே மாதிரி போலீஸ் அதிகாரிகள் செய்யும் தவறை யாருக்கும் தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள். எனக்குத் தெரிந்து பல போலீஸ் அதிகாரிகள்கும்பல் இணையதளத்தை தினமும் பார்க்கிறார்கள். அவர்களுக்கே நீங்கள் தான் நியூஸ் தானம் செய்கிறீர்கள். ராமஜெயம் கொலை வழக்கின் முழு பின்னணியையும் வெளிப்படுத்தி விரைவில் ஒரு கட்டுரை எழுதுங்கள்.

Anonymous
9 April 2012 at 18:48

Azhagiriyin pinnani ithil unda? Vilakkamaaga ezhuthungal..........

Anonymous
17 April 2012 at 07:52

Latest update?

KAMAlAKKANNAN

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger