இவரைத் தெரிகிறதா..? தலைவருக்குப் பின்னால் தலைகாட்டும் இந்தத் தமிழனைத் தெரிகிறதா?
களத்தில் நடந்துவரும் இந்தக் காளையைத் தெரிகிறதா?
பொட்டு அம்மானின் பக்கத்தில் நிற்கும் இந்தத் தளபதியைத் தெரிகிறதா?
அருகே அமரவைத்து தலைவனால் அழகு பார்க்கப்படும் இந்த ஆண் மகனைத் தெரிகிறதா?
புலிக் கொடி ஏற்றும் இந்தப் புண்ணியவானை தெரிகிறதா?
ஆம்... கருணாவேதான்! அடடா.. என்ன ஒரு சிரிப்பு...
தலைவனின் தடம் நடக்கும் வீரனாக வலம் வந்தவன், விலைபோனவனாக மாறியது தமிழனின் ஈன குண எடுத்துக்காட்டு.
பணத்துக்காக தடம் மாறியவன், பதவிக்காகத் தடுமாறியவன் இன்று உருமாறி நிற்கும் கோலத்தைப் பாருங்கள்...
தமிழர்களைக் காக்க வந்த தகையாளன்
கற்புக்கரசன்
பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத பெருந்தகையாளன்
இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக நித்திரை தொலைத்து அல்லாடும் போராளி...
இன்றும் முள்வேலி தமிழர்களுக்காக மூச்சடக்கி போராடும் புலி...
தமிழர் வேதனையால் உறக்கமற்றுத் தவிக்கும் தன்மான சிங்கம்...
இன எதிரிகளை வேரறருக்கும் வீரன்
சிங்களர்களின் கொட்டத்தை அடக்க வந்த கோமகன்
மாலை மரியாதைகளை தவிர்க்கும் மாண்பாளன்
அம்மணமான தமிழனுக்காக அரை நிர்வாணம் சுமக்கும் அபூர்வ பிறப்பு
எளிமையின் இருப்பிடம்
மகிந்தாவின் முதல் எதிரி
ஈழத்தை இழந்த நாளில் இருந்து சிரிக்க மறந்த வைராக்கியக்காரன்
உள்ளத்தில், உடையில், பதவியில், பகட்டில் தலைகீழாக மாறி இருக்கும் கருணாவே... புலனடக்கம் இல்லாமல் நீ எப்படியோ அலைந்து தொலைந்து போ... வாய் நிறைய புன்னகையும், உடல் முழுக்க புன்னகையுமாய் உன்னை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள். எங்கள் இனத்தின் ஈன உருவாக, இதயத்தை நொறுக்கிய புழுவாக நீ மாறியதில் ஆச்சரியம் இல்லை; அதிர்ச்சியும் இல்லை. உன்னிடத்தில் ஒரே ஒரு கேள்விதானடா... உடுக்க உடையின்றி, உருப்படியான உணவின்றி தவிக்கும் எம்மக்களின் நிலை கண்டு சற்றும் கலங்காமல் கூத்தடிக்கும் உன்னால், எப்படியடா என் தலைவனின் அருகே நிற்க முடிந்தது? அவர் நிழல் பட்டு வளர்ந்தவனாக நீ இருந்திருந்தால், எப்படியடா இத்தனை துயரங்களுக்கு மத்தியில் உன்னால் தினவெடுத்து அலைய முடிகிறது.
கருநாகமாய் மாறிய கருணாவே... இதே சிங்களவனின் துப்பாக்கி உன்னையும் ஒருநாள் காறித்துப்பும். கடைசித் துடிப்பில் தான் காட்டிக் கொடுக்கும் கொடுரத்தின் வலி உனக்கு உரைக்கும். தோட்டா உன்னைத் துளைக்கும் வரை நீ ஆடு... காரணம், நீ காட்டிக்கொடுத்த கறுப்பாடு!
- KUMBAL



















+ comments + 11 comments
super ,,,,,,antha throga naai oru naalum thirunthaathu,,,,,
KARUNA VAI... TAMILAN ENDRU YARAVADHU SONNAAL NAAN SERUPAL ADIPPEN...... SINGALA NAYEEKALIN KAI KULI SINGALATHAVAN ....SERUPPU... TAMILANIN MUTHAL ETHURI
தோட்டா உன்னைத் துளைக்கும் வரை ஆடு... காரணம் நீ காட்டிக் கொடுத்த கறுப்பாடு... பிரமாதமான வரிகள்... கருணாவுக்கு சவுக்கடி கொடுக்க இந்த ஒரு கட்டுரை போதும்!
i like the comments above
avanai enn summu vidanum. karupattai pali koduthuvida vendiyathuthane?
avan seytha seyal thanathu thayai thane koottikoduththathu pol allava irukkirathu. ivanum uyirodu than irukkiran.
inathai kati koduthavanum thaiai kuti kuduthuvanum ondru tan....... avan oru thurogi.... avan irupathilim irapathey mel... by vinoth marathamilan.......
karunagam karunavey ney setuvidu ilayendral en makal kaiyal adipattu savai..........
ORU KARUPPU AADU KALUTTHIL MALAIUDAN ARUKKAPADUVATHARKKAGA KASAPPUKKADIYIL KATTAPPATTULLATHU.THROGIGALIN MUDIVAI PULIGALIN VARALARU SOLLUM.. SH ....SH ADANAGAMATTENDRANPPA...
Idhu pondra soollambuhaluku varuthappadum nilamaiyai ivargal eppodho thaandi vittaargal.... idhu pondra dhrogihaluku nijamaana villambuhal dhaan sathiyathai puriya vaikum.....
good news.
Post a Comment